1727583710 Sanath Jayasuriya L
செய்திகள்விளையாட்டு

சனத் ஜயசூரியவின் அதிரடி முடிவு: 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகல்!

Share

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான் விலகப்போவதாக சனத் ஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக பேட்டியின் போது சனத் ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது ஒப்பந்தக் காலம் இன்னும் எஞ்சியிருக்கின்ற போதிலும், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தனக்கு விருப்பமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடரின் போது அவர் ‘இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக’ நியமிக்கப்பட்டார்.

அந்த ஆண்டின் இறுதியில் அவரது சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, அவர் முழுநேரத் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சனத் ஜயசூரியவின் தலைமையின் கீழ் இலங்கை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகளின் விபரம்:

மொத்தப் போட்டிகள்: 60 (அனைத்து வகையான போட்டிகளும் சேர்த்து)
வெற்றிகள்: 29
தோல்விகள்: 29
முடிவில்லை/சமநிலை: 02

சனத் ஜயசூரியவின் பயிற்சிக் காலத்தில் இலங்கை அணி பல முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ள நிலையில், உலகக்கிண்ணத் தொடரின் பின்னர் அவர் விலகவுள்ளமை இரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...