images 7 1
ஏனையவை

தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் – பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

Share

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வருகையினால் மேலும் வலுவடைந்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) மதியத்திற்குப் பிறகு தையிட்டியில் சீகிரியாவிலிருந்து புதிய புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரைக் காங்கேசன்துறை பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், தையிட்டிக்குள் நுழைய அனுமதிக்காமல் அவர்களைப் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

காணி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பேருந்துகள் மூலம் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளை வழிமறித்த பொலிஸார், அவரது விபரங்களைப் பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கில், அங்கு வருகை தருவோரின் விபரங்களைப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருவதாகக் காணி உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தையிட்டியில் புதிய சிலைகளை நிறுவவோ அல்லது கட்டுமானங்களை முன்னெடுக்கவோ விடமாட்டோம் எனப் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது.

 

 

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...