IMG 1357 1080
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பருத்தித்துறையில் 48 மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி: நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அடிக்கல் நாட்டினார்!

Share

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சுடலை வீதியை புனரமைப்பதற்கான உத்தியோகபூர்வ அடிக்கல் நாட்டு விழா இன்று சனிக்கிழமை பிற்பகல் 5:30 மணியளவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 48 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பிரதான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பின்வரும் அதிகாரிகளும் அடிக்கல்லை நாட்டி வைத்தனர்:

பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ந.திருளிங்கநாதன், பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கற்கோவளம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்

இந்த வீதி புனரமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்து சிரமங்கள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...