MediaFile 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நூரியில் கொடூரம்: 14 வயதுச் சிறுவன் அடித்துக் கொலை – தந்தையே கைது!

Share

நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02-ஆம் பிரிவில் 14 வயதுடைய சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (02) இரவு நூரியவத்தை பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்கப்படுவதாக நூரி பொலிஸ் நிலையத்திற்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், வீடொன்றுக்கு அருகில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த சிறுவனை மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் உடனடியாக நூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுவனின் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் சடலம் தற்போது மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு அல்லது வேறு ஏதேனும் காரணம் இந்தக் கொலைக்குக் பின்னணியில் உள்ளதா என்பது குறித்து நூரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...