MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

Share

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்:

டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அவரிடம் இருந்த துப்பாக்கிகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவே விசாரணைகளை நடத்துகின்றது.

கடந்த 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவருக்கு 13 ‘ரி-56’ (T-56) ரகத் துப்பாக்கிகள் மற்றும் 6 பிஸ்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான சட்டப்பூர்வத் தன்மை மற்றும் பயன்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) கடந்த காலங்களில் மேற்கொண்டதாகக் கூறப்படும் கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோருதல் மற்றும் ஊழல் முறைகேடுகள் அனைத்தும் விரைவில் அம்பலமாகும் என்றும், அதனை நீதித்துறை உறுதிப்படுத்தும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...