24 66ac07c4e08b5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: வீதியால் சென்ற முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த கனகரட்ணம் துரைராஜசிங்கம் (67 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிலிருந்து அத்தியாவசியத் தேவை நிமித்தம் வெளியில் சென்ற இவர், ஆறுகால்மடம் மடத்தடிப் பகுதியில் வீதியோரமாகச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் பயணித்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி வீழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சடலம் மீட்கப்பட்டு மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...