124723826 gettyimages 90913551
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காத்தான்குடியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது: பாகிஸ்தான் தயாரிப்புகள் மீட்பு!

Share

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் சட்டவிரோத போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த இளைஞர் ஒருவரைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தலைமையில், புதன்கிழமை (31) மாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் வீதிச் சோதனையின் போது இந்தச் சந்தேக நபர் பிடிபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இளைஞர் ஆவார். இவரிடமிருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 84 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாகப் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் இவ்வாறான தொடர் சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...