India housing project
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டங்கள்: நிதியுதவியை 10 இலட்சமாக இரட்டிப்பாக்க இந்தியா முடிவு!

Share

இலங்கையில், முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்று முக்கிய வீடமைப்புத் திட்டங்களுக்கான நிதி உதவியை இரட்டிப்பாக்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான இராஜதந்திர கடிதங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

உயர்மட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் கீழ், கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு I மற்றும் கிராம சக்தி தெற்கு II ஆகிய மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கைசாத்திடப்பட்டன.

இதன்படி, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தாமாகவே வீடுகளைக் கட்டும் முறைமையின் கீழ் தலா ஐந்து இலட்சம் இலங்கை ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்தது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ஒதுக்கப்பட்ட நிதி ஊடாக வீடுகளை முழுமையாகக் கட்டிமுடிக்க பயனாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை பத்து இலட்சம் ரூபாயாக அதிகரிக்க இந்தியா இணக்கம் தெரிவித்தது.

இந்த நிதி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கான கடிதங்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகாவத்த ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.

அதிகரிக்கப்பட்ட நிதியுதவியின் மூலம் ஆயிரத்து 550 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...