images 10
செய்திகள்இலங்கை

2025-ன் இறுதி நாளில் சோகம்: இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு!

Share

2025 ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர வீதி விபத்துகளில் சிக்கி குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த இவர் வாரியப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேநேரம், நிலாவெளி – தெஹிவத்தை வீதியின் மூதூர் – குங்குவெளி சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.அவருடன் பயணித்த ஏனைய இருவர் பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பங்கதெனிய – ஆணமடுவ வீதியின் குமாரகட்டுவ பகுதியில் உந்துருளி ஒன்றும் உழவு வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த 23 வயதுடைய இளைஞர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மேலும், கொழும்பு – பியகம வீதியின் பட்டிய சந்திக்கு அருகில் உந்துருளி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற பாரவூர்தி மோதியதில் பின்னால் அமர்ந்து பயணித்த 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புத்தளம் – குருநாகல் வீதியின் மல்லங்குளம் பகுதியில் உந்துருளி மீது நோயாளர் காவு வண்டி ஒன்று மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...