images 11
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்குக் காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தையிட்டி விகாரை விவகாரம் குறித்துத் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம், யாழ். மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையே நேற்று (31) நடைபெற்றது.

அக்காணிகளின் உரிமம் மக்களுக்கே உரியது என்பது சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விகாரைக்கு மேற்குப் புறமுள்ள காணிகளை முதற்கட்டமாக விரைவாக விடுவிக்கவும், ஏனைய காணிகளை 4 கட்டங்களாக விடுவிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய தற்காலிகக் கட்டடங்களை அகற்றி வேறிடத்திற்குக் கொண்டு செல்வதற்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்ட விடுவிப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விகாரை நேரடியாக அமைந்துள்ள நிலப்பரப்பு மூன்று தரப்பினருக்குச் சொந்தமானது. எனினும், அதற்கான மாற்றுக்காணி அல்லது நஷ்டஈடு குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் விளக்கமளித்த காணி உரிமையாளர்கள், “இது ஒரு யோசனையாகவே முன்வைக்கப்பட்டுள்ளது, இறுதி முடிவல்ல. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 3 ஆம் திகதி தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தனர்.

மூன்று வருடங்களாகத் தொடரும் தையிட்டி காணி விவகாரத்தில், மாவட்டச் செயலரின் இந்த முயற்சி ஒரு சாதகமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...