images 4 7
செய்திகள்இலங்கை

தேசிய மின்சாரக் கொள்கை: பொதுமக்களின் ஆலோசனைகளை கோருகிறது வலுசக்தி அமைச்சு!

Share

தேசிய  மின்சார கொள்கைக்காக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை கோரும் நடவடிக்கையை வலுசக்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு 36ஆம் இலக்க இலங்கை மின்சார(திருத்தம்) சட்டத்தின் 4 ஆம் உறுப்புரையின் பிரகாரம் தேசிய மின்சார கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  அந்த சட்டமூலம்  https://energymin.gov.lk/ வலுசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க விரும்புபவர்கள் 2026.01.09 ஆம் திகதி அல்லது அத்தினத்துக்கு முன்னர் neac@energymin.gov.lk மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ,
செயலாளர், வலுசக்தி அமைச்சு இல.437.காலி வீதி கொழும்பு 03 என்ற முகவரி ஊடாகவோ அல்லது 011 2574 753 என்ற தொலைநகல் ஊடாகவோ தமது யோசனைகளை அனுப்பி வைக்க முடியும்.

இவ்விடயம் தொடர்பில் 011 2574 922 (இறுதி இலக்கம் 509/ 510/403 ) ஊடாக அழைத்து மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...