25 694be11238450
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி காணி மக்களின் காணி மக்களிடமே வழங்கப்பட வேண்டும் – நாக விகாரை விஹாராதிபதி வலியுறுத்தல்!

Share

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதை ஏற்றுக்கொண்ட யாழ். நாக விகாரையின் விஹாராதிபதி விமலதர்ம தேரர், அவற்றை மீண்டும் உரியவர்களிடமே ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தையிட்டி பகுதியில் விஹாரை அமைக்கப்பட்டுள்ள காணி தனியார் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என விஹாராதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தாமல், காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தியுள்ளார்.

நீண்டகாலமாகத் தமிழ் மக்கள் மற்றும் அரசியல் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தையிட்டி காணி விடுவிப்புப் போராட்டத்திற்கு, ஒரு பௌத்த மதகுருவாக அவர் வழங்கியுள்ள இந்த ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது. இது இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ஒரு நேர்மறையான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியில் தீர்க்கப்படாமல் இழுபறியாக இருந்த இந்த நில விவகாரம், தற்போதைய புதிய அரசாங்கத்தின் கீழ் நீதியாகத் தீர்க்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தையிட்டி விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரரும் ஏற்கனவே “சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தால் ஏற்கத் தயார்” எனக் கூறியுள்ள நிலையில், நாக விஹாரை விஹாராதிபதியின் இந்தக் கருத்து தீர்வை நோக்கிய முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...