52e545af 47a4 4384 9d9a 6528a8375208 w1080 h608 s
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெகிழ்ச்சியூட்டும் மனிதாபிமானம்: நாட்டின் மறுசீரமைப்புக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள்!

Share

நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி, ஹட்டன் – பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் முன்மாதிரியாகச் செயற்பட்டுள்ளனர்.

கொட்டியாக்கலை தோட்டத்தின் N.C. பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து, தங்களது கடின உழைப்பின் மூலம் ஈட்டிய 108,000 ரூபாயை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்காக வழங்கியுள்ளனர்.

சேகரிக்கப்பட்ட இந்த நிதித் தொகையானது தேசிய மக்கள் சக்தியின் (NPP) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் நோக்குடன் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காகத் தோட்டத் தொழிலாளர்கள் காட்டிய இந்த அர்ப்பணிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...