செய்திகள்அரசியல்இலங்கை

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பிப்ரவரி 1-ல் ஆரம்பம்: புதிய நடைமுறைகளை வெளியிட்டது பெப்ரல்!

Share

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது. இம்முறை கணக்கெடுப்பு முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் அனைத்து வீடுகளுக்கும் வருகை தரமாட்டார்கள். புதிதாகச் சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட ‘A’ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிக்க வேண்டிய வீடுகளுக்கும், தகவல் சேகரிக்கப்பட வேண்டிய அவசியமுள்ள வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் நேரில் செல்வார்கள்.

இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும் முறையை அவதானிக்க அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா என்பது குறித்து உத்தியோகத்தர்கள் வழங்கும் பரிந்துரைகளை அவர்கள் கண்காணிக்க முடியும்.

கணக்கெடுப்பின் போது ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், அது குறித்து உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க முடியும். அதன் பிரதியொன்றை மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலைச் சீராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பேணுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பெப்ரல் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...