images 13 1
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தில் சர்ச்சை: குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய அமைச்சர் சந்திரசேகரன்!

Share

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வொன்றில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பொதுவாகத் தேசியக் கொடி ஏற்றப்படும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்கும் வகையில் நேராக நின்று வணக்கமுறை பின்பற்றுவது வழக்கம். ஆனால், மழை காரணமாக அமைச்சர் ஒரு கையால் குடையைப் பிடித்தவாறு மறு கையால் கொடியை ஏற்றியுள்ளார்.

நாட்டின் கௌரவமாகக் கருதப்படும் தேசியக் கொடியை ஏற்றும் போது அமைச்சர்கள் போன்ற முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும் எனவும், இந்தச் செயல் தேசியக் கொடிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவி வரும் நிலையில், இது குறித்துப் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...