25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

Share

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் இருப்பதாக ஜனாதிபதி அநுர தலைமையிலான தரப்பினர் நீண்டகாலமாகக் கூறி வந்தனர். அந்த டொலர்களை மீட்பதற்கு இதுவே பொருத்தமான காலம் என அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிதியை மீட்பதற்கான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தாம் தயார் எனவும், தேவையெனில் இதற்காகச் சத்தியக் கடதாசிகளை (Affidavits) வழங்கவும் தான் முன்வருவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இருப்பினும், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பலமான எதிர்க்கட்சியாகச் செயற்படவும் இத்தகைய இணைவுகள் அவசியமானவை என்றார்.

நாட்டின் நன்மைக்காக எதிர்க்கட்சியாகத் தாம் இணைந்து செயற்பட வேண்டிய இடங்களில் உரிய ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...