25 694d12fa09782
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சிறுமி மரணம்: 6 பேர் கொண்ட நிபுணர் குழு இன்று விசாரணையை ஆரம்பிக்கிறது!

Share

முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், தமது விசாரணைகளை இன்று (26) ஆரம்பிக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். உமாசங்கரின் பரிந்துரைக்கமைய, விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும், மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படாமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதியான விசாரணை கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்தே இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...