செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹக்கல தாவரவியல் பூங்கா மீண்டும் திறப்பு: பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

Share

‘டிட்வா’ சூறாவளி மற்றும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நுவரெலியா – ஹக்கல தேசிய தாவரவியல் பூங்கா, இன்று முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வழங்கிய பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமையவே பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் இன்னும் முழுமையாக நீங்காததால், பூங்காவின் நுழைவாயிலுக்கு அருகிலுள்ள குளம் மற்றும் வனப் பூங்காவிற்குச் செல்லும் பாதைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க, தடை செய்யப்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பூங்கா ஊழியர்களால் சுற்றுலாப் பயணிகளுக்கென விசேட உதவித் திட்டங்கள் மற்றும் வழிகாட்டல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலத்திற்குள் சீரமைப்புப் பணிகளை முடித்து, பூங்காவை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருப்பதாகச் சுற்றாடல் அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...