MediaFile 2 8
செய்திகள்இலங்கை

முகமாலையில் ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி!

Share

யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ‘யாழ் தேவி’ ரயிலுடன், ரயில் வழித்தடத்திலுள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...