images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

Share

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்) 5.8 சதவீத வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) அறிவித்துள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்பட்ட மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2025 நவம்பர் மாதத்தில் மட்டும் 1,364.52 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.56 சதவீத வளர்ச்சியாகும்.

2025 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி இலக்கில் 86.3 சதவீதத்திற்கும் அதிகமான அடைவு, நவம்பர் மாத முடிவிலேயே எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க இது குறித்துத் தெரிவிக்கையில் பிரதான சர்வதேச சந்தைகள் வழமைக்குத் திரும்பியமை மற்றும் நிலையான உற்பத்தித் திறன் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.

ஏற்றுமதி அபிவிருத்தி மூலோபாயங்களைத் திறம்படச் செயற்படுத்தியதன் மூலம் உலகளாவிய சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணிக்கக்கல், ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானமும் இந்த மொத்த வருமானத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன.

இந்தத் தரவுகள் உலகளாவிய வர்த்தகத்துடன் இலங்கை வலுவாக ஒன்றிணைந்துள்ளதையும், மாறிவரும் சந்தைச் சூழலுக்கு ஏற்ப ஏற்றுமதியாளர்கள் தங்களை இசைவாக்கிக் கொண்டுள்ளதையும் வெளிப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...