603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

Share

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 3 அடி நீளமும், 25 முதல் 50 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவை என மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு அல்லது மாற்றங்கள் காரணமாக இந்த ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கருதுகின்றனர்.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள ஆமைகள் குறித்து அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றமை சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...