25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

Share

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித் திட்டம் ஒன்றை இந்தியா அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் விஜயமாக கொழும்பு வரவுள்ளார்.

அனர்த்தத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் வழங்கப்படவுள்ள பிரம்மாண்ட உதவித் திட்டத்தை அவர் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது விஜயத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளை அவர் கூட்டாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.

இலங்கை அனர்த்தத்தில் சிக்கிய உடனேயே இந்தியா தனது நிவாரண உதவிகளையும் மீட்புக் குழுக்களையும் அனுப்பி வைத்திருந்தது. தற்போது வரை இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய பேருதவித் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

அமைச்சர் ஜெய்சங்கர் வேறு எந்தெந்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார் என்பது குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்தியத் தூதரகம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...