images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

தனியார் காணிகள் விடுவிக்கப்படும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் – அமைச்சர் சுனில் செனவி!

Share

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

இன்று தையிட்டியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் கைது சம்பவங்களைத் தொடர்ந்து, எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தையிட்டி விஹாரை அமைந்துள்ள பகுதிகளில் அமைச்சின் அதிகாரிகள் தற்போது நில அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர். விஹாரைக்கு அவசியமான காணிகளைத் தவிர்ந்த, எஞ்சிய தனியார் காணிகளை அதன் உரிய உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விஹாராதிபதிக்கு வழங்கப்படுவது பௌத்த கலாசார ரீதியிலான ஒரு சான்றிதழ் மட்டுமே. இது பாடசாலைகளில் வழங்கப்படும் பதவி உயர்வு போன்றதல்ல. எனவே, இந்தச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வையும், காணிப் பிரச்சினையையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தையிட்டி பகுதியில் நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தர்க்கரீதியான மற்றும் நியாயமான தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தையிட்டியில் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, வேலன் சுவாமிகள் மற்றும் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...