images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

Share

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக வரும் காலங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நெல் வகைகள் அறுவடைக்கு சுமார் 4 மாதங்கள் எடுக்கும். தற்போதைய நிலையில், சேதமடைந்த வயல்களில் மீண்டும் பயிரிடுவதற்குத் தேவையான, குறுகிய காலத்தில் விளைச்சல் தரக்கூடிய விதை நெல் வகைகள் கைவசம் இல்லை. இதனால் சந்தையில் இவ்வகை அரிசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவலாம்.

பாதிக்கப்பட்ட நெற்காணிகளில் மீண்டும் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டால், நாடு மற்றும் சிவப்பு அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், நெற்செய்கை மட்டுமன்றி சோளம், நிலக்கடலை மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஏனைய பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, சுமார் 10,000 ஹெக்டேயர் சோளப் பயிர்ச் செய்கை, 2,011 ஹெக்டேயர் நிலக்கடலைச் செய்கை மற்றும் 1,188 ஹெக்டேயர் பச்சை மிளகாய் செய்கை நாசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...