images 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பெப்ரவரி 28-க்குள் கருத்துக்களை வழங்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை!

Share

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாகப் பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கருத்துக்களைக் கோருவதாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிபுணர் குழு, கடந்த 11 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மூன்று மொழிகளிலும் இந்தச் சட்டமூலத்தைத் தயாரித்துள்ளது.

மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் அமையும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது இறுதிச் சட்டமூலம் அல்ல. அமைச்சரவைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ இதனைச் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, மக்களின் ஆலோசனைகளைப் பெற்று அதில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் காவல்துறையினரின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் பொதுமக்கள் தமது ஆலோசனைகளை முன்வைக்க முடியும். 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நீதியமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளமான www.moj.gov.lk இல் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆக்கபூர்வமான கருத்துக்களை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெறப்படும் அனைத்து ஆலோசனைகளும் மீண்டும் அதே நிபுணர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதன் பின்னரே இறுதிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...