images 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்; நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படும் – பிரதமர் ஹரினி அமரசூரிய!

Share

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பதிலளிக்கும் போதே பிரதமர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்.

நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்கான அவசியமான நடவடிக்கைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தின்படி, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். அதற்குப் பதிலாகப் பாராளுமன்ற ஆட்சி முறைமையை (Parliamentary System) நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு புதிய அரசியலமைப்பைக் கொண்டுவராமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிக்க முடியாது என்பதால், அது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் இந்த நகர்வுகள் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...