1703761313 rukshan bellana l
இலங்கைஅரசியல்செய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன பணி இடைநீக்கம்!

Share

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன, சுகாதார அமைச்சினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் பின்வரும் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஒரு பொறுப்பு வாய்ந்த அரச வைத்திய அதிகாரி என்ற ரீதியில், உரிய அனுமதியின்றி பல்வேறு ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமை. நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் தகவல்களைப் பரிமாறியமை.

கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிகிச்சைகளுக்காகத் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களைக் கசியவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை அவர் பணிக்குத் திரும்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....