24 66eb8fc8ba474
செய்திகள்அரசியல்இலங்கை

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான முறைப்பாட்டை நிராகரித்தமை தவறு: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Share

2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டத்திற்கு முரணானது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போராட்டக்களம் மீதான தாக்குதலின் போது, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகப் போராட்டக்காரர் ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனிப்பட்ட முறைப்பாடு (Private Complaint) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க அப்போதைய கொழும்பு பிரதம நீதவான் தீர்மானித்திருந்தார்.

நீதவான் நீதிமன்றின் தீர்மானத்திற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரணை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, நீதவான் நீதிமன்றின் முந்தைய தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்துள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக மீண்டும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...