24 66a051459b531
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரக்கறி சந்தை நிலவரம்: 1,000 ரூபாயைக் கடந்தது கறிமிளகாய்; தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு!

Share

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கறிமிளகாய் மற்றும் தக்காளியின் விலைகள் நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, தம்புத்தேகமவில் 980 முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தக்காளி, தம்புத்தேகமவில் 400 ரூபாய் முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் பச்சை வீட்டுத் தக்காளி 600 ரூபாய் முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரட் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 170 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையிலும், நுவரெலியாவில் 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை லீக்ஸ் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 260 ரூபாய் முதல் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில், 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்ட்டது.

அத்துடன் தம்புத்தேகமவில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 550 ரூபாய்க்கும், பாகற்காய் 600 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் போஞ்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

 

 

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...