24 66a051459b531
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மரக்கறி சந்தை நிலவரம்: 1,000 ரூபாயைக் கடந்தது கறிமிளகாய்; தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு!

Share

நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கறிமிளகாய் மற்றும் தக்காளியின் விலைகள் நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, தம்புத்தேகமவில் 980 முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தக்காளி, தம்புத்தேகமவில் 400 ரூபாய் முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் பச்சை வீட்டுத் தக்காளி 600 ரூபாய் முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரட் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 170 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையிலும், நுவரெலியாவில் 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை லீக்ஸ் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 260 ரூபாய் முதல் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில், 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்ட்டது.

அத்துடன் தம்புத்தேகமவில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 550 ரூபாய்க்கும், பாகற்காய் 600 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் போஞ்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.

 

 

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...