accident
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் சோகம்: இருவேறு விபத்தில் 15 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

Share

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துகளில் 15 வயதுச் சிறுவன் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன், 2 பேர் படுகாயமடைந்த சோக சம்பவம் நேற்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) மாலைவேளை இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து சந்திவெளி நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுரேந்திரன் கிறசன் என்ற இளைஞன் உயிரிழந்தார். இந்த விபத்துத் தொடர்பாகக் கனரக வாகனச் சாரதியை வாழைச்சேனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சந்திவெளி காவல் துறை பிரிவிலுள்ள பாலையடித்தோணா பகுதியில், 16 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்றுள்ளனர். வேக கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்து இதுவாகும்.

இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய ஜெயசீலன் ஜெதுசன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்துகள் குறித்து அந்தந்தக் காவல் நிலையப் போக்குவரத்துப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...