1737374118 school students 6
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலை: மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் 640 பாடசாலைகள் தவிர மற்ற அனைத்தும் நாளை திறப்பு!

Share

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நாளை (டிசம்பர் 16) முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலுள்ள சகல பாடசாலைகளும் நாளைய தினம் மீள திறக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், ஏனைய மூன்று மாகாணங்களில், 640 பாடசாலைகள் மாத்திரம் நாளைய தினம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அந்த மாவட்டங்களிலுள்ள ஏனைய பாடசாலைகள் மீள திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, மத்திய மாகாணத்தில் 111 பாடசாலைகளும், ஊவா மாகாணத்தில் 524 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 5 பாடசாலைகளும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்டத்திலேயே அதிகளவான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, மஹியங்கனை கல்வி வலயத்தில் 3 பாடசாலைகளும், பிபிலை வலயத்தில் ஒரு பாடசாலையும், பசறை வலயத்தில் 88 பாடசாலைகளும், பதுளை வலயத்தில் 112 பாடசாலைகளும், வியலுவ வலயத்தில் 70 பாடசாலைகளும், வெலிமடை வலயத்தில் 110 பாடசாலைகளுக்கு, பண்டாரவளை வலயத்தில் 140 பாடசாலைகளும் நாளைய தினம் திறக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், திறக்கக்கூடிய நிலையில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் நாளை தினம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...