1529329179 Colombo Fort 2
இலங்கைசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு கட்டுப்பாடு: கடற்படை, கடலோரக் காவல் படையின் துரித நடவடிக்கை!

Share

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் மிதவையில் இன்று காலை (டிசம்பர் 14) ஏற்பட்ட திடீர் எண்ணெய்க் கசிவு, இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் துரித நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்காக கொழும்பு துறைமுகத்துக்கு அப்பாலான கடற்பகுதியில், கப்பலொன்றிலிருந்து மசகு எண்ணெய்யை இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கசிவு ஏற்பட்டு, எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

இது தொடர்பில் துறைமுக அதிகாரசபையிடமிருந்து அவசர அறிவித்தல் கிடைத்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது 3 அதிவேகத் தாக்குதல் படகுகளையும் கடலோரக் காவல் படையில் இணைந்த பாதுகாப்புப் படகுடன் இணைந்து கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பியது.

இந்தக் கட்டுப்பாட்டு முயற்சியின்போது, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஆதரவும் பெறப்பட்டது.

ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் பயனாக, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருந்த எண்ணெய்க் கசிவுப் பரவலானது திறம்படத் தடுத்து நிறுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...