Tamil News large 3478126
இலங்கைசெய்திகள்

400 சுற்றுலாப் பயணிகளுடன் ரிட்ஸ்-கார்ல்டன் சொகுசுக் கப்பல் கொழும்பு வருகை – சுற்றுலாத் துறைக்கு ஊக்கம்!

Share

பிரமாண்டமான சொகுசுக் கப்பல் நிறுவனமான ரிட்ஸ்-கார்ல்டன் (The Ritz-Carlton) நிறுவனத்துக்கு உரித்தான சொகுசுக் கப்பல் ஒன்று, 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (டிசம்பர் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

அனர்த்தத்தின் பின்னரான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

இந்தச் சொகுசுக் கப்பலை வரவேற்க, பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் பல உயரதிகாரிகள் துறைமுகத்தில் பிரசன்னமாயிருந்தனர்.

வருகையின்போது, பிரதி அமைச்சர் கப்பலின் குழுவினருடன் சுமூகமாகக் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், கப்பலையும் பார்வையிட்டார். இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பிரதாயபூர்வமான நினைவு பரிசுப் பரிமாற்ற நிகழ்வும் நடைபெற்றது.

இந்தக் கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின்னர், அது நாளை (டிசம்பர் 15) காலி துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

இத்தகைய உயர்மட்ட சொகுசுக் கப்பலின் வருகை, உலக அரங்கில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களின் மீதான நம்பிக்கையையும் கவர்ச்சியையும் மீள நிலைநிறுத்த உதவுவதாகச் சுற்றுலாத் துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...