25 693bb9d901043
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் பாரிய வெடிப்புக்கள்: அமைச்சர் லால் காந்த தகவல்!

Share

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.

கொத்மலை அணைக்கட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டு வரும் செய்திகள் தொடர்பில் ஆராய்வதற்காக அணைக்கட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் பாதையிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. “மலைத் தொடரில் இதற்கு முன்னர் வெடிப்புகள் இருக்கவில்லை” என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

கொத்மலை அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அணைக்கட்டு எந்நேரத்திலும் உடைபடலாம் எனவும் கம்பளை மற்றும் கண்டியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

“கொத்மலை அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இது தொடர்பிலான உண்மையான தகவல்களை மறைப்பதாகப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்” என்று அமைச்சர் மக்களுக்கு உறுதியளித்தார்.

சாதாரண வானிலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், மீண்டும் ஒரு சூறாவளி ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...