மலையகத்தில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X/Twitter) தளப் பதிவு ஒன்றில் வெளியிட்ட தகவல்கள் “உங்களுடன் கடந்த வாரம் கண்டி, கம்பளைக்குச் சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம்.”
மனோ கணேசனும் மலையக மக்களும் அதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், “அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதனை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.”
இந்த நிலையில், அம்மக்களை மிகுந்த பாசத்துடன் மனதார வரவேற்பதற்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.”
அதேபோன்று, அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும், பயிர்ச்செய்கை மற்றும் தோட்டம் போன்றவற்றுக்கும் பெற்றுத் தர எம்மாலான முயற்சிகளைச் செய்துகொடுப்போம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.