25 67c95a2b2fb73
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயது பாடசாலை மாணவன் கைது: பண்டாரவளையில் பரபரப்பு!

Share

பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் இன்று (டிசம்10) கைது செய்யப்பட்டதாகப் பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவன் எத்தலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்றும், பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பவன் என்றும் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசாரணையில், குறித்த மாணவன் பாடசாலையில் நாடகம் மற்றும் நடனக் கலைகளைக் கற்று வருவதுடன், பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பரத நாட்டிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளான். பல சந்தர்ப்பங்களில் பரத நாடகங்களில் இளம் பெண்ணாகத் தோன்றியுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

தாயார் அனுப்பிய பணத்தில், ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த பர்தாவை வாங்கியதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பர்தாவை அணிவதற்கு இருந்த ஆசையில், தனது சகோதரி பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்ற பின்னர், அவரது ஆடைகள், செருப்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை நகரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றை அணிந்து நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

குறித்த மாணவனின் தாயும் தந்தையும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவன் தனது பாட்டியின் வீட்டில் சகோதரியுடன் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...