MediaFile 2 4
இலங்கைசெய்திகள்

நிவாரணம் வழங்குவதாகக் கூறும் மோசடிக்காரர்களிடம் அவதானமாக இருங்கள் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை!

Share

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைச் (Personal Information) சில மோசடிக்காரர்கள் பெறும் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

பேரிடருக்குப் பின்னரான நிவாரணச் செயற்பாடுகளுக்கான தகவல் சேகரிப்பானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம சேவகர்களுடன் இணைந்து, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாக அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், தமது தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...