articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

Share

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, 2026 ஜனவரி மாத இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மிகவும் கடுமையாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் விமான நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணைக்குழு (ICA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் விபரங்கள் மற்றும் ஆவணங்களை விமான நிறுவனங்கள் முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும். ICA அதனை ஆய்வு செய்த பிறகு, தகுதியான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூர் வர அனுமதிக்கப்படுவார்கள். உரிய ஆவணங்கள் இல்லாத பயணிகளை அவர்கள் புறப்படும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உரிய விசா அல்லது ஆறு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத பயணிகளுக்கு அனுமதி கிடையாது. சிங்கப்பூருக்குச் செல்ல விரும்பும் பயணிகள், விமான டிக்கெட் எடுப்பதற்கு முன், ICA தளத்தின் (ICA Feedback Channel) வழியாக நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ICA நேரடியாக அனுமதி அளிக்கும் வரை பயணத்தைத் திட்டமிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ICA எச்சரித்துள்ளது. விதிகளின்படி நடக்காத விமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

தகுதியான ஆவணங்கள் இல்லாத பயணியை அனுமதித்த விமான நிறுவன ஊழியர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

25 67c712a0b3ef1 md
உலகம்செய்திகள்

ரஷ்ய அச்சுறுத்தலைச் சமாளிக்க: ஜேர்மனியில் மீண்டும் கட்டாய இராணுவ சேவைச் சட்டம் நிறைவேற்றம்!

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தலைச்...