FB IMG 1764904684113 large
அரசியல்இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரணத்தில் பாரபட்சமா? உள்நாட்டுப் பகுதிகளுக்கு உதவிகள் தாமதம் – மக்கள் வேதனை!

Share

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு, அவை தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எனினும், பாதிக்கப்பட்ட பல தமிழ் மொழி பேசுவோர் வாழும் உள்நாட்டுப் பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7) மாலை 5 மணி வரையிலும் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நகரங்களிலிருந்து பல கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசாங்கம் இதுவரையிலும் கவனிக்கவில்லை என்றும், அதற்கான பொறிமுறையை அவசரமாக ஏற்படுத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர்.

ஆகக் குறைந்தது, கிராம சேவகர் கூடத் தங்களுடையப் பிரதேசங்களை எட்டிக் கூடப் பார்க்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து வேதனைப்படுகின்றனர்.

நாலவப்பிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இங்கு இனங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றபோதிலும், நிவாரணப் பணிகள் பின்தங்கிய பகுதிகளுக்குக் கிடைப்பதில் உள்ள தாமதமே இந்த வேதனைக்குக் காரணமாக உள்ளது.

ஆகையால், பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பான மிகச் சரியான தகவல்களைப் பெற்று, அந்த மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகளை உடனடியாகக் கிடைப்பதற்கான வழிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என நாமும் உரிய தரப்பினரின் கவனத்துக்கு இந்தச் செய்தியின் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.

 

Share
தொடர்புடையது
4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க...

22 61ea2c4754d53
இலங்கைசெய்திகள்

தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால்...

image 2589f1a804
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து கொழும்புக்கு 73,000 கிலோகிராம் மரக்கறிகள் அனுப்பப்பட்டன: விலைகள் குறித்த விபரம் உள்ளே!

நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து இன்று (09) சுமார் 73,000 கிலோகிராம் மரக்கறிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

thailand cambodia border
உலகம்செய்திகள்

தாய்லாந்துடனான மோதலில் கம்போடியாவில் 7 பேர் பலி: 20,000 பேர் வெளியேற்றம்!

தாய்லாந்துடனான சமீபத்திய எல்லை மோதலில் கம்போடியாவில் 07 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும்...