articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

Share

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினைக்குத் துரித தீர்வு காணும் நோக்கில், கீழ்க்காணும் மாவட்டங்களில் மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட வயல்நிலங்களில் படிந்துள்ள மணலை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, அனுராதபுரம், குருநாகல்.

ஹுருலுவெவ, ரம்பக்கன் ஓயா மற்றும் அதனை அண்டிய வயல் நிலங்கள்.

குறித்த பயிர்ச்செய்கை நிலங்கள் அல்லது காணி உரிமையாளரின் மேட்டு நிலம் அல்லது அனுமதி பெறப்பட்ட வேறொரு காணிக்கு இலகு ரக போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி மணலைக் கொண்டு செல்லலாம்.

இதன்மூலம், நிலங்களை மீண்டும் தயார்படுத்திக்கொண்டு தேவையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமில்லாத ஏனைய பயிர்ச்செய்கை நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்றி, அந்தப் பயிர்ச்செய்கை நிலத்தின் ஒரு பகுதியிலேயே களஞ்சியப்படுத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு பணியகம் பிராந்திய அகழ்வுப் பொறியியலாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எதிர்காலத்தில் அகற்றப்பட்ட அந்த மணல் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுமாயின், அதற்கான முறையான அனுமதியை உரிய பணியகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் GSMB குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...