G7joV9tbwAAL77S
இலங்கைசெய்திகள்

அமெரிக்க உதவியுடன் நிவாரணப் பணிகள் தீவிரம்: C-130J விமானங்கள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன! 

Share

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று (டிசம்பர் 7) கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன.

இந்த அமெரிக்க அணி, அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகாலப் பொருட்களைக் கொண்டு செல்ல இலங்கை விமானப்படையுடன் (SLAF) இணைந்து பணியாற்றவுள்ளது.

கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களில் கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் ஆகியவை அடங்கும்.

“இந்தத் திட்டம், உயிர் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பெரியளவில் போக்குவரத்து மற்றும் விநியோக பலத்தை அளிக்கும்,” என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...