images 6 2
இலங்கைசெய்திகள்

அநுராதபுரம் அனர்த்த நிவாரணம்: நெற்செய்கையைத் தொடர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல் – வீடுகளுக்கு அதிக இழப்பீடு!

Share

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அநுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளுக்குப் பல அவசர உத்தரவுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.

 அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாக பெரும்போக நெற்செய்கையைத்’ தேசியத் தேவையாகக் கருதித் தொடங்குவதற்குத் தயாராகுமாறு ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தினார்.

பயிர்ச் சேதங்களுக்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இதனை உரியவர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார்.

நாளைய தினம் (டிசம்பர் 8) மின் விநியோகத்தை முழுமையாக்க மின்சார அதிகாரிகளைப் பணித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்குள் நீர் விநியோகத்தையும் முழுமையாக்க நீர் வழங்கல் அதிகாரிகளைப் பணித்தார்.

 எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலைகளையும் மீளத் திறக்கவும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் திறைசேரியால் வழங்கப்படும் . 15,000/- நிவாரணத்தை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த அனர்த்தத்தால் அநுராதபுரம் மாவட்டத்தில் முழுமையாகச் சேதமடைந்த 228 வீடுகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான துல்லியமான தரவுகளை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Share
தொடர்புடையது
b9d8b9a9ab0ea7958d1545b4b61a17b5 1
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிலைமை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 639 ஆக அதிகரிப்பு – 203 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற வானிலை அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639...

ban2 1762774731
உலகம்செய்திகள்

சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு அவுஸ்திரேலியா: 16 வயதிற்குட்பட்டோர் கணக்குகள் நீக்க உத்தரவு!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா...

images 5 3
இலங்கைசெய்திகள்

அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் மீள ஆரம்பம்: 9929 பாடசாலைகள் டிசம்பர் 16 இல் திறப்பு!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு...

images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...