25 69316e1e1a0b5
உலகம்செய்திகள்

டொன்பாஸை பலவந்தமாகவேனும் கைப்பற்றுவோம்: உக்ரைனுக்குப் புட்டின் மீண்டும் எச்சரிக்கை!

Share

உக்ரைனுக்குச் சொந்தமான டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்தை பலவந்தமாகவேனும் கைப்பற்றப் போவதாகவும், அதனால் உக்ரைன் இராணுவம் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் ஒருமுறை உக்ரைனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்சமயம் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி புட்டின், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகத் தமக்கு பாதகமான அனைத்து சமரசங்களையும் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் டொன்பாஸை பலவந்தமாகப் பெறுவோம். அவ்வாறு நடக்காமல் இருக்க உக்ரைன் இராணுவம் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்,” என அவர் கூறினார்.

தற்போது டொன்பாஸில் சுமார் 85% ரஷ்யாவினால் நிர்வகிக்கப்படுகிறது. அதன் கிழக்குப் பகுதியில் மாத்திரமே உக்ரைன் இராணுவம் நிலைகொண்டுள்ளது.

எவ்வாறாயினும், உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி தமது நிலத்தை விட்டுக்கொடுப்பதை நிராகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FclE2t29E6WCHMZuJCogv
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண உதவியாக மாலைதீவிலிருந்து 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை!

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...

PMD
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விசேட உரை: அனர்த்த நிவாரண அறிவிப்பு மற்றும் சொத்து வரி விளக்கம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின்போது, நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார...

5Vj3jiF6Jb72oIg3IwA0
இலங்கைசெய்திகள்

அனர்த்தப் பாதிப்பு: நாடளாவிய ரீதியில் 504 மருத்துவக் குழுக்கள் சிகிச்சை அளிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்...

images 10
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களைக் கையாள்வது குறித்து இலங்கை மத்திய வங்கி ஆலோசனை!

நாட்டையே பேரழிவிற்கு உட்படுத்திய சமீபத்திய வெள்ளத்திற்குப் பிறகு, ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு...