images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

Share

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரர்களை நினைவுகூர்ந்துள்ளார். இந்தியாவின் காரைக்குடியில் நேற்று (நவம்பர் 27) நாம் தமிழர் கட்சியால் அனுசரிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இலங்கையின் இறுதிப் போர் குறித்துப் பல கேள்விகளை எழுப்பினார்.

சீமான் தனது உரையில், “வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோர்: “போர்க்காலத்தில் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதிகள் கூறினர். அதன்படி, வெள்ளைக்கொடியுடன் சென்று 300 பேர் சரணடைந்தனர்.”

“வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்களைக் கொலை செய்யக் கூடாது என்பது சர்வதேசப் போர் மரபு. இருப்பினும், அவர்களை எப்படி கொலை செய்தீர்கள்? ஏன் அவர்களை கொலை செய்தீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.”

“முள்ளிவாய்க்காலில் இருந்து எல்லோரும் வாருங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகின்றோம் என அழைத்தவர்கள் சிங்கள இராணுவத்தினர். சரணடைந்த 10,000க்கும் மேற்பட்டோர் இப்போது எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டபோது சர்வதேசத்திலிருந்தும் எவரும் ஏன் கேள்வி எழுப்பவில்லை?”

மேலும், அவர் தனது உரையை முன்னெடுத்தபோது, தேசிய தலைவரையும் நினைவு கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...