இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை, கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் தலைமையில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகம் மன்னார் ரயில் வீதிப் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்தக் கிளை அலுவலகத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தனர்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.