images 4 1
செய்திகள்உலகம்

சூடான் உள்நாட்டுப் போர்: 2.5 ஆண்டுகளாகத் தொடரும் மோதல் – ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் பலி!

Share

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். (RSF) எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் போக்கு, கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உள்நாட்டுப் போராக வெடித்தது. 2.5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த உள்நாட்டுப் போரால் நாட்டில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போரின் காரணமாகச் சுமார் 1.5 கோடி பேர் (15 மில்லியன்) தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறினர்.

இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவானது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றித் தவித்து வருகின்றனர்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் காரணமாக அங்குள்ள கோர்டோபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று சூடான் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...