25 6910899281fc4
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சைக் கடமையின்போது மதுபோதை: கிளிநொச்சி மேற்பார்வையாளர் பணி நீக்கம்!

Share

தற்போது நடைபெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் (A/L Examination) கடமையின் போது மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில், கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் (கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்டது) கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக் கடமையின் போது, குறித்த மேற்பார்வையாளர் மது போதையில் இருந்ததாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்துச் சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், மதுபோதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...