691d4cefe4b04fae5692dd8e
செய்திகள்உலகம்

ஜப்பானில் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து: 170 கட்டிடங்கள் நாசம், ஒருவர் பலி!

Share

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி (Saganoseki) நகரத்தின் துறைமுகப் பகுதியில் நேற்று (நவம்பர் 19) திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், சுமார் 170 கட்டிடங்கள் எரிந்து நாசமாயின. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சகனோஸ்கி நகரம் கடற்கரை நகரமாகும். இங்கிருந்து பிடிக்கப்படும் உயர்தரமான சாளை வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த மீன் ஏற்றுமதிக்காக அமைக்கப்பட்ட துறைமுகம், மீன்களை உறைய வைக்கவும் பதப்படுத்தவும் கட்டப்பட்ட கிடங்குகள் (Warehouses), மற்றும் மீனவர்களின் வீடுகள் எனப் பல கட்டிடங்களுக்குத் தீ வேகமாகப் பரவியது.

தீவிபத்து குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் வந்து தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே துறைமுகத்தில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவ இடத்தைச் சுற்றியிருந்த 170 கட்டிடங்கள் தீயில் எரிந்து நாசமான இக்கோர விபத்தில், ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...