images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

Share

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 68 மற்றும் 59 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்தது தொடர்பாக, ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

விசாரணையில் உயிரிழந்த தம்பதியினர் ‘உனகுருவே சாந்தா’ என்ற நபரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது இந்தக் கொலை பாதாள உலகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள், தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளைச் சீனிமோதரை (Seenimodara) பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் குறித்துத் தங்காலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...