67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

Share

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் ஆதரவுக் குழுவான தஃப்சிக் (Tafsik) அமைப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. நகரங்களில் கொடி ஏற்றுவதைத் தடை செய்யுமாறு கோரி தஃப்சிக் மனுத் தாக்கல் செய்துள்ளது.

சமூக ஊடகங்களில், நகர மண்டபங்களில் கொடி ஏற்றப்பட்ட இந்த விடயம் யூத சமூகத்திற்கு எதிரான வன்முறையினைத் தூண்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையைத் தடுக்கும் நோக்கில் பொறுப்பான குழுவின் செயல்பாட்டிற்குத் தாம் ஆதரவு வழங்குவதாகத் தஃப்சிக் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.சம்பந்தப்பட்ட தரப்பினர் இன்று (நவம்பர் 18) நீதிமன்றத்தில் பிரசன்னமாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர மண்டபங்களில் கொடி ஏற்றுவது புதியதல்ல. இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இஸ்ரேலிய சுதந்திர தினத்திற்கான இஸ்ரேலியக் கொடி உட்படப் பல கொடிகள் நகர மண்டபங்களில் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...